
என் மீது நீ வந்தே சாய்ந்தாடம்மா
ஏழுஸ்வரங்களில் நான் பாடவே
முந்நூறு நாள் சுமந்த முத்து மணியே – என்
மனம் நிறைந்த வண்ண முழு நிலவே
என் மீது........
1
ஆராரோ நான் பாட வாளர்ந்தாயம்மா
என் - ஆருயிராகவே ஆனாயம்மா
தீராத ஆசையே தேனூற்றாகியே – அது
தெவிட்டா இன்ப புது பாட்டாகவே
மடி மீதே உனை வைத்து தாலாட்டவே – என்
மகிழ்விற்கே மகிழ்வாக ஆனாயம்மா – நான்
படிக்கின்ற பாடலே பல மாதிரி – அதை
படிப்பேனே உனக்காக புது மாதிரி
என் மீது .........
11
நிலவோடு வான் மேகம் கதை பேசவே – அது
நில்லாமல் ஓடவே கலைத்தோடியே – ஏ
நிலவே நீ நலமா? என்றே கேட்கவே - இந்
நிகழ்வாலே என் சங்கீதம் உருவாகவே
தாலாட்டி சீராட்டி நான் பாடியே – உன்
தலைவாரிப் பூச் சூட்டி ஆளாக்கியே
நிலாக்காட்டி மகிழ்ந்தாட சோறூட்டியே
நீயே என் தோள் மீது சாய்ந்தாடவே
என் மீது...........
No comments:
Post a Comment