Monday, April 19, 2010

கவிதை 3 - கொட்டிலுக்குள்ள...




கொட்டிலுக்குள்ள கும்மாளந் தான் போட்டுக்கலாமா?

குடி குடியக் கெடுக்கிறத மறந்திடலாமா? நீங்க..

கட்டிய பெண்சாதி பிள்ளை கலங்கிடலாமா....? – நாளை

காலன் உங்கள வதைத்திடவே வருந்திடலாமா?

கொட்டிலுக்குள்ள


1

பிறண்டி> விஸ்கி என்றே பல பெயர்களைக் கொண்டே – கொடும்

பாதகச் செயல் செய்திடவே பக்கத் துணை யானதே..

கறள் பிடிக்க வைத்து உடம்பை பல காயங்கள் செய்தே..

காறி உமிழும் நீரினிலே இரத்தங் கசியவே.


ஈரல்> இதயம்> கிட்னி> மற்றும் உறுப்புகளை எல்லாம் - தன்

இரையாக்கிக் கொண்டே எம் இன்னுயிரை வதைக்கவே.

வேரறுந்த மரமாய் ஒர் நாளில் வீழவே .. – நல்

வாழ்விழந்தே இவ்வுலகை விட்டே மாண்டு போகவே - இன்;றே...

கொட்டிலுக்குள்ள


2

முட்டி தட்டிப் பாட்டுப் பாடும் வேளையில் நீங்க

முயன்றால் முடியாத தென்று எதுவுமே இல்லை – நீங்க

காட்டும் வழி நல்வழியாய் இருக்க வேண்டுமே – என்றும்

கலங்கரையாய் எம்மவர்க்கே நீர் திகழ வேண்டுமே.....

வெட்டிக் கதை பேசியே வீண் வம்பளக்கவே ..... பிறர்

வெறிகாறன் பேச்சென்றே வெறுவாயே சப்பவே ..- நீங்க

கட்டும் வேட்டி இல்லாமலே தெருக் கானில் கிடக்கவே – அங்கே

காலைத் தூக்கி நாய் உன் முகத்தில் பூ மாரி பொழியவே...

இன்றே

.

கொட்டிலுக்குள்ள

No comments:

Post a Comment